Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

அறிஞர்களின் முத்துக்கள்...  

 

விலைவாசிகள் இறக்கப்படுவது ஓன்றே உண்மையான வாழ்க்கைத்தர உயர்வுக்கு வழிகோலும்.

அறிஞர் அண்ணா.

 

மலரைப் பார், கொடியைப் பார், வேர் எப்படியிருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதை பார்க்க் முயன்றால் நீ மலரையும், கொடியையும் பார்க்க முடியாது.

கண்ணதாசன்.

 

ான் என்ற உணர்வு நிச்சயமாக தவறில்லை. நான் மாத்திரம் தான் என்ற உணர்வு தான் தவறு.

டாக்டர் எஸ். மனோகர் டேவிட்.

 

ங்கள் கூடாரங்கள் பிரிந்திருக்கட்டும். உங்கள் இதயங்கள் சேர்ந்திருக்கட்டும்.

 

கடந்த காலம் பற்றிய நினைவு மனிதனை அறிவாளி ஆக்குவதில்லை. வருங்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே அறிவாளிக்கு அடையாளம்.

பெர்னாட் ஷா.

 

கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.

கன்பூசியஸ்.

 

உனது துயரங்களை பிறரிடம் கூறாதே. பலர் அதற்காக வருத்தப்படமாட்டார்கள். சிலரோ அதில் மகிழ்ச்சியும் அடைவர்.

யாரோ.

 

வதூரை அடக்குவதற்கு அதை அலட்சியமாக தள்ளிவிடுவதே முறை.

யாரோ.

 

க்கள் அனைவருக்கும் கல்வி அளிக்காமல் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது சாபக்கேடாய் அமையும்.

ஹெர்மன் எல். லேலேண்ட்.

 

முதுகுக்குப் பின்னால் ஓரே ஓரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகை தட்டிக் கொடுப்பதுதான்.

யாரோ.

 

வனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.

ஹிட்சாக்.

 

ீங்கள் முன்னுக்கு வர பணம் தேவையில்லை. மற்றவரின் பணத்தை பயன் படுத்தியே முன்னுக்கு வரலாம். அதற்கு தேவை நேர்மை, துணிவு, கடின உழைப்பு உங்களிடம் இருக்க வேண்டும்.

 

நம்மிடம் உள்ள பணம் நம் செருப்பைப் போல இருக்க வேண்டும். செருப்பு சின்னதாக இருந்தால் அது நம் காலைக் கடிக்கும். பெரியதாக இருந்தால் நாம் இடறி விடுவோம்.

கோல்டன்.

 

ேலை செய்ய வேண்டியது நம் தலையெழுத்து என்று வேலை செய்பவன் அடிமை. வேலை செய்வதுதான் சுகம் என்று வேலை செய்கின்றவன் கலைஞன். தேவை இல்லாத வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்கின்றவன் முட்டாள்.

ஆண்ட்ரூ.

 

னக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.

தந்தை பெரியார்.

 

டவுளுக்கு செலுத்தும் காணிக்கையை குழந்தைகளின் கல்விக்கு செலுத்துங்கள்.

டாக்டர் அம்பேத்கார்.

 

ல்லவர்களுக்கு தனிமை என்பது கிடையாது. அவர்களைச் சுற்றி எப்போதும் பத்து பேர் கூடிவிடுவார்கள்.

சுந்தர ராமர்.

--வளரும்

                                     -- 1  2   3   4   5

 

 

ஓருவனின் மனம் தூய்மையாக இல்லையெனில் பணமோ, பலமோ அவனுக்குப் பலன் தராது.

-அரிஸ்டாட்டில்.

 

நீங்கள் செய்யும் எந்த குற்றத்திற்காகவும் சந்தர்ப்பம், சூழ்நிலை ஆகியவற்றை காரணம் காட்டாதீர்கள்.

-பெர்னாட்ஷா.

 

சோம்பேறி இரண்டு முட்களுமில்லாத கடிகாரம் அது நின்றாலும் ஓடினாலும் உபயோகமில்லை.

-கௌப்பர்.

 

பழிவாங்க விரும்பினால் முதலில் அலட்சியம் செய்து விடு. அது ஆரம்பம். மன்னித்து விடு. அது முடிவு.

-பெர்னாட்ஷா.

 

உலகில் வெற்றிகரமான மனிதனாக வாழ நான்கு நற்குணங்கள் மட்டுமே தேவை. நிறைய பொருமை, வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தும் திறமை. தவறைக் கண்டிக்கும் அச்சமின்மை, தவறு செய்தவர்களை அணைத்துச் செல்லும் கணிவுடைமை.

-மாத்யூ ஆர்னால்ட்.

 

மக்களின் வறுமையை போக்க வேண்டுமானால் முதலில் அவர்களுடைய அறியாமையை கட்டாயக்கல்வி மூலம் நீக்குங்கள். சிக்கனமாக வாழக் கற்றுக்கொடுங்கள்.

விஸ்வேஸ்வரய்யா.

 

ஓரு நாடு நல்ல சட்டங்களால் ஆளப்படுவதை காட்டிலும் நல்ல மனிதனால் ஆளப்பெறுவது மேலாகும்.

-அரிஸ்டாட்டில்.

 

சிலர் பணத்தை வெறுப்பாக கூறுவர் அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தையே.

-கோல்ட்டன்.

 

ஓரு காரியத்தை ஏன் தவறாக செய்தோம் என்று விளக்கம் சொல்வதற்குள் அதை சரியாக செய்து விடலாம்.  

-யாரோ.

 

பணம் என்பது ஓரு சாதனைப் பொருள். அதுவே சுகமன்று. முடிவன்று.  அவரவர்களுக்கு ஓரு வரம்புண்டு. அந்த வரம்புக்கு மேல் மிஞ்சின பின் அது ஓரு பாரமும் கவலையும் தான்.

-ராஜாஜி.

 

ஓற்றுமையாக இருங்கள் ஆனால் மிக நெருக்கமாக இருக்காதீர்கள்.

-கலீப் இப்ரான்.

 

அனுபவம் என்பது புது மாதிரியான வாத்தியார். அது பாடங்களை கற்றுத் தந்த பின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலம் தான் பாடங்களைக் கற்றுத் தருகின்றன.

-கவிஞர் கண்ணதாசன்.

 

கடமையைச் செய்கின்றவனுக்கு கடமை இருந்து கொண்டே இருக்கும். கவலைப்படுகின்றவனுக்கு கவலை இருந்து கொண்டே இருக்கும்.

-யாரோ.

 

விவாதம் செய்வது நிழல்களுடன் போராடுவதற்கு சமம்.

-வெஸர்மாஸ்.

 

பார்க்க கண்களை கொடுத்த ஆண்டவன் பாராதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி.

- யாரோ.